திரு அவதாரப் படலம் - 263
தசரதன் வேள்விச்சாலையிற் புகுதல்
262.
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்: நிருபர்க்கு ஏந்தலும்.
தூய நல் புனல் படீஇ. சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன்.
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்- அந்த வேள்விக்கு
உரியனவாகிய பொருள்கள் எல்லாவற்றையும்; ஏய் எனக்
கொணர்ந்தனர் - ஏய் என்னும் அளவிலே பணியாட்கள் கொண்டு
வந்து சேர்த்தனர்; நிருபர் வேந்தனும் - மன்னர் மன்னனான தயரதச்
சக்கரவர்த்தியும்; தூய நல் புனல் படீஇ - தூய நல்ல நீரிலே நீராடி;
சுருதி நூல்முறை சாய்வரத் திருத்தி - வேத நூல் முறைப்படி
குறைவின்றி அமைக்கப்பட்ட; சாலைபுக்கனன் - வேள்விக்கென்று
அமைக்கப்பட்ட வேள்விச் சாலை அடைந்தான்.
ஆயதற்கு: ஆய+அதற்கு (அகரம் தொக்கது). கலப்பை: பொருள்கள்
உழு கலப்பை எனவும் கூறுவர். ‘ஏய்’ விரைவை உணர்த்தி நின்றது.
ஏந்தல்: அரசன். நிருபர்: மன்னர். படீஇ: படிந்து சொல்லிசை
அளபெடை வினையெச்சப் பொருளை உணர்த்தி நின்றது.
சாய்வு+அற: சாய்வற: ஒரு குறையும் இல்லாமல் சாய்தல் -
சுருங்குதல் புக்கனன்: புகுந்தான். திருத்திய: செப்பம் செய்யப்பட்ட
கொணர்ந்தனர் எவர்? பணியாட்கள் - தோன்றா எழுவாயாகும்
கலப்பை என்பதற்குப் பொருள்கள் என்ற பொருள் உடைமையைக்
‘காவினம் கலனே சுருக்கினம் கலப்பை’ என்ற புறப்பாட்டாலும்
அறியலாம்.
யாவையும் கொணர்ந்தனர் - ஏந்தலும் புனல் படீஇ - சாலை
புக்கனன் என்பது முடிபு. 83
