தாடகை வதைப் படலம் - 418
தேவர் மகிழ்ச்சி
418.
‘யாமும் எம் இருக்கை பெற்றேம்;
உனக்கு இடையூறும் இல்லை;
கோமகற்கு இனிய தெய்வப்
படைக்கலம் கொடுத்தி’ என்னா.
மா முனிக்கு உரைத்து. பின்னர்.
வில் கொண்ட மழை அனான்மேல்
பூமழை பொழிந்து வாழ்த்தி.
விண்ணவர் போயினாரே.
யாமும் எம் இருக்கை பெற்றேம்- தேவர்களாகிய நாங்களும்
இழந்த எங்கள் இருப்பிடங்களை அடைந்துவிட்டோம்; உனக்கு
இடையூறும் இல்லை - உனக்கோ அரக்கர்களால் இனி எந்த
இடையூறும் உண்டாக மாட்டாது; கோமகற்கு இனிய தெய்வப்
படைக்கலம் கொடுத்தி என்னா - அரசிளங் குமாரனாகிய
ராமபிரானுக்கு இனிய தெய்வத் தன்மையுடைய படைக்கலங்களைக்
கொடுப்பாயாக என்று; மாமுனிக்கு உரைத்து - மாபெரும் முனிவனான
விசுவாமித்திரனுக்குச் சொல்லி; பின்னர். வில்கொண்ட மழை அனான்
மேல் - பிறகு. வில்லை ஏந்திய மேகம் போன்றவனான
இராமபிரான்மீது; பூமழை பொழிந்து - மலர்மாரி பெய்து; வாழ்த்தி
விண்ணவர் போயினார்- அவனை வாழ்த்தித் தேவர்கள் சென்றனர்.
‘யாமும்’ என்பதிலுள்ள ‘உம்மை’ எதிரது தழீஇய எச்ச உம்மை.
யாம்: தேவர்களாகிய யாம். இருக்கை: இருப்பிடம் (உறையுள்).
பெற்றேம் என்பது தன்மைப்பன்மை வினைமுற்று. இடையூறு. தீங்கு.
கோமகன்: அரசகுமாரன். கொடுத்தி: முன்னிலை ஏவல் வினைமுற்று
‘விற்கொண்ட மழை’ இல்பொருள் உவமையாம். பூமழை: மலர்மாரி.
நாங்களும் எங்கள் இடங்களைத் திரும்பப் பெற்றோம். என்றது.
அரக்கர்கள் அத் தேவர்களை விரட்டி. அவர்களது இடங்களைத்
தமக்கு உரிமையாக்கிக் கொண்டனர். அரக்கர்கள் இனி அழிதல்
திண்ணம் என்பதால் ‘யாமும் எம் இருக்கை பெற்றோம்’’ என்றர். கால
வழுவமைதி. 55
