தாடகை வதைப் படலம் - 401

bookmark

திருமால் கியாதியைக் கொன்ற வரலாறு கூறுதல்

401.    

‘பிருகு என்னும் பெருந் தவன்தன் மனை
வரு கயல் கண் கியாதி. வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற. உறவாதலே
கருதி. ஆவி கவர்ந்தனன். நேமியான்.
 
பிருகு-  பிருகு முனிவன்;  கயல்கண் - கயல் போன்ற கண்; வல்
ஆசுரர்க்கு   -   வலிய   அசுரர்களுக்கு;   உறவாதல்   -   உறவு
உடையவதனால்; கருதி  -  எண்ணி;  ஆவி  -  உயிர்; நேமியான் -
ஆழிப்படையுடைய திருமால்.                                39-2