தாடகை வதைப் படலம் - 375
சுந்தன் அகத்தியராச்சிரமத்தில் மரங்களைப்பறித்து வீசுதல்
375.
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர.
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மா தவன் உறைவிடம் அதனின் வந்து. நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்.
தீது உறும்- தீங்குடைய; அவுணர் - அரக்கர்; தீமை தீர்தர -
தீங்கு தீர; எலாம் - எல்லாம்;மாதவன் - அகத்தியன்; நீள் பாதவம் -
பெரிய மரம் (மலையுமாம்.) 20-10
