தாடகை வதைப் படலம் - 353

bookmark

353.

ஏக வெங் கனல் அரசிருந்த. காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின;-
மாக வெங்கதிர் எனும் வடவைத் தீச் சுட.
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே.
 
ஏக  வெம்கனல் அரசிருந்தகாட்டினில்   -   கொடிய   கனலே
தனித்தலைவனாக அரசு  செலுத்திவரும்  பாலைநிலத்திலே;   காகமும்
கரிகளும்  கரிந்து சாம்பின - வானில் பறக்கும் காக்கைகளும் கானில்
திரியும்   யானைகளும்  வெந்து உயிரிழந்து கிடந்தன; மாக வெங்கதிர்
எனும்  -   மிகக் கொடும்கனல்  எனக்கூறப்படும்;  வடவைத் தீச்சுட
-‘வடவா முகாக்கினி’ நெருப்புச் சுடவே; மேகமும் கரிந்து - வானத்தில்
திரியும்  மேகங்களும்  வெந்து  கருகி;  இடை  வீழ்ந்த  போலும் -
பாலைநிலத்திடையே வீழ்ந்துள்ளன போல (காணப்படுகின்றன).

ஏகம்:  ஒன்று.   தனிமை.   போன்ற  பல பொருள் உடைய சொல்.
கனல்:  வெப்பம்.   அரசிருந்து:    ஆட்சிபுரிந்து  ‘’காகமும்’’   என்று
கூறியதால் விண்ணில்  பறக்கும்  பறவைக்கூட்டங்களும் ‘கரி’  என்றதால்
மண்ணில்திரியும்   விலங்கினங்களும் உபலட்சணத்தால் கொள்ளப்படும்.
மற்றவைபற்றிக்   கூறவேண்டாதாயிற்று.  கரிதல்: வெந்துருகிப் போதல்.
மாகம்:  பெருமை!   வடவைத்தீ  கடல்நடுவே  - குதிரை  முகவடிவிலே
இருக்கும்  பெரு  நெருப்பு  ‘ஊழிப்பெருந்தீ’  என உரைப்பர்.  புராண
வழக்கு.  ‘மேகமும்’   என்பதிலுள்ள  ‘உம்மை’  தட்பத்தைக் குறிப்பது
எனினும்   அதனையும்    வேகச்செய்வது    கனல்  என்ற  சிறப்பை
உணர்த்தும்                                               12