தாடகை வதைப் படலம் - 346

bookmark

பாலைநில வருணனை (346-353)

346.

பருதிவானவன் நிலம் பசை
   அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம்
   வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால்.
   எரி சுடர்க் கடவுளும்
கருதின். வேம் உள்ளமு;
   காணின். வேம் நயனமும்.
 
பருதி  வானவன் நிலம் பசை அறப்பருகுவான்- ?சூரிய  தேவன்
நிலத்தின்   ஈரத்தை   மிகுதியாகப்   பருகும்   பொருட்டு;    விருது
மேற்கொண்டு உலாம் - வெற்றியை மேற்கொண்டு உலாவும்; வேனிலே
அல்லது  இருது  வேற  இன்மையால்  -  வேனிற்  காலமேயல்லாது
(அந்நிலத்தில்)   வேறுகாலம்  இல்லாமையால்;  எரிசுடர்க்  கடவுளும்
கருதின்   -   நெருப்புத்  தேவனும்கூட  இப்பாலையின்  வெப்பத்தை
எண்ணுவானானால்;   உள்ளமும்   வேம்  -  அந்தத்  தீக்கடவுளின்
இதயமும்    வெந்து   போகும்;   காணின்   நயனமும்   வேம் -
இப்பாலையைக் கண்டுவிட்டால் கண்களும் வெந்து போகும்.

பின்     இரண்டடிகள் உயர்வு நவிற்சி யணியாகும்.  பருதிவானவன்:
சூரிய   தேவன்.  பசை:  ஈரம்.  விருது:  வெற்றி.   உலாம்:   உலாவும்
என்பதன்  இடைக்  குறை.  இருது:  ருது:  பருவம்  என்பது  பொருள்.
வேம்: வேகும் என்பதன் மரூஉ.

சூரியன்     நிலத்தின்  ஈரம்   முழுவதையும்   பருகுவேன்  எனச்
சூளுரைத்து-  உலாவுகின்ற அப்பாலை  நிலத்தில் வேனில்காலம்  தவிர.
வேறுபருவமே  இல்லாமையால்  -   அந்தப்பாலையின் வெப்பம்  பற்றி
நினைக்கும் தீக்கடவுளின் மனமும்  வெந்துபோகும்  பார்த்த  கண்களும்
வெந்துபோகும்  என்பது  கருத்து.   இது  முதல் 12 பாடல்கள்  பாலை
நிலத்தின் தோற்றத்தையும் தன்மையையும் கூறுவனவாம்.            5