கையடைப் படலம் - 335

bookmark

இராமலக்குவருடன் விசுவாமித்திர முனிவன்
புறப்படுதல்

335.

கொடுத்த மைந்தரைக் கொண்டு. சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு. இனிது வாழ்த்தி. ‘மேல்
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம்’ எனா.
நடத்தல் மேயினான். நவைக்கண் நீங்கினான்.
 
கொடுத்த மைந்தரைக் கொண்டு - தயரதன் கொடுத்த பிள்ளைகள்
இருவரையும் ஏற்றுக்  கொண்டு; முந்து சிந்தை எடுத்த சீற்றம் விட்டு
- முன்னர் மனத்தில் ஏறிய  கோபத்தை  விட்டு:  இனிது  வாழ்த்தி -
மன்னனை    இனிதே   வாழ்த்தி: மேல் அடுத்து  வேள்வி  போய்
முடித்தும்  நாம்  என  - இனிமேல் சென்று. தொடங்கிய வேள்வியை
நாம்    முடிப்போம்   என்று.;   நவைக்கண்  நீங்கினான் நடத்தல்
மேயினான்   -  குற்றம்   நீங்கிய   முனிவனாகிய   விசுவாமித்திரன்
புறப்படலானான்.

கொடுத்த:  அடைக்கலமாகக்  கொடுத்த. கொண்டு பெற்றுக்கொண்டு
முந்து:  முன்   என்பதன்  மரூஉ. எடுத்த: மேலெழுந்த. சீற்றம்: சினம்.
அடுத்தல்.   தொடங்குதல்.  முடித்தும். தன்மைப் பன்மை வினைமுற்று.
நடத்தல்மேயினான். நடக்கத்  தொடங்கினான். நவை: குற்றம்.      19