கடிமணப் படலம் - 1310
கிம்புரி அணிதல்
தொடையணி அணிதல்
1310.
காசொடு கண் நிழல் கஞல. கைவினை
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின். மகரவாய் விளங்கும் வாள் முகம்.
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே;
காசொடு கண் நிழல் கஞல- மணிகளின் ஒளியோடு காண்பார் கண்
ஒளியும் இணைந்து விளங்க; கைவினை ஏசறு கிம்புரி - கைகளால்
செய்யப்படுகிற விசித்திர வேலைப்பாடுகளில் குற்றமில்லாத கிம்புரி
என்னும் அணியானது (சுறா மீனின் திறந்த வாய் வடிவமாகச் செய்யப்
படுவதாதலின் அச்சுறா மீனின்); எயிறு வெண்நிலா வீசலின் -
பற்களாகப் பதித்துள்ள மணிகளிலிருந்து வெண்ணிறமான ஒளி
வீசுவதால்; மகரவாய் விளங்கும் வாள் முகம் - அந்தக் கிம்புரி
என்னும் அணியினது ஒளி விளங்கும் முகம்; ஆசையை ஒளிகளால்
அளந்து காட்டவே - திக்குகளின் எல்லையை இவ்வளவு என்று
அளந்து காட்ட (இராமன் அணிந்தான்)
கஞலல்: விளங்கல். ஆசை: திசை. கிம்புரி: மகர மீனின் திறந்த
வாய் போன்ற தாய்த் தொடையில் அணியப்படும் ஓர் அணி.
இதனைக் “குறங்கு நெறி” என்பர். “மகரவாய்” என்று கூறுதலும்
உண்டு. 65
