எழுச்சிப் படலம் - 823

bookmark

வள்ளுவன் பறையறைதல்

823.    

வானம் பரி விரி திரைக் கடலை. வள்ளுவன்.-
தேம் பொழி துழாய் முடிச் செங் கண் மாலவன்.
ஆம் பரிசு. உலகு எலாம் அளந்துகொண்ட நாள்.
சாம்புவன் திரிந்தென. - திரிந்து சாற்றினான்.
 
தேம்     பொழி- தேனைச் சொரிகின்ற;   துழாய்முடி -  துழாய்
மாலையணிந்த   திருமுடியையும்;   செங்கண்   மாலவன்  -  சிவந்த
கண்களையும்  கொண்ட  திருமால்; ஆம் பரிசு - (தன்)   முறைமைக்கு
ஏற்றவாறு;  உலகு  எலாம்  -  (சுவர்க்கம். மத்திமம். பாதாளம் என்ற)
மூவுலகங்களையும்;   அளந்து   கொண்டநாள்  -  (தன்  மூவடியால்)
அளந்து   கொண்ட   காலத்தில்;    சாம்புவன்   -  (அச்செய்தியை)
சாம்பவான்; திரிந்து என - பறையறைந்து திரிந்தது போல; வாம்பரி -
தாவிச்   செல்லும்   குதிரைகளாகிய;   விரிதிரைக்கடலை  -  விரிந்த
அலைகளையுடைய    கடலுக்கு    (சேனைக்கு);    வள்ளுவன்    -
பறையறையும்  வள்ளுவன்;  திரிந்து  சாற்றினான் -  திரிந்து  (முரசு
அறைந்து) செய்தி தெரிவித்தான்.

வள்ளுவன்     - முரசு அறைந்து செய்தி தெரிவிப்போன். மாலவன்
உலகெலாம் அளந்து கொண்ட நாள் சாம்புவன் திரிந்தென  வள்ளுவன்
திரிந்து    சேனைக்    கடலுக்குக்   கூறினான்.    தாவிச்   செல்லும்
குதிரைகளைக் கடல் அலைகளுக்கு ஒப்புக் கூறுதல் மரபு.           8