ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன்

bookmark

வாழ்க்கை வரலாறு ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். வணக்கம் வள்ளுவம் என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதை 2004-ஆம் ஆண்டில் வென்றவர்.