மிதிலைக் காட்சிப் படலம் - 667
பிரமதேசு பெறக் கோசிகன் தவமேற் செல்லுதல்
கௌசிகன் தவம் மேற்கொள்ளல்
667.
‘கண்டனன் அரசன்; காணா.
‘’கலை மறை முனிவர்க்கு அல்லால்
திண்திறல் வலியும் தேசும்
உள எனல் சீரிது அன்றால்;
மண்டலம் முழுதும் காக்கும்
மொய்ம்பு ஒரு வலன் அன்று’’ என்னா.
ஒண் தவம் புரிய எண்ணி.
உம்பர்கோன் திசையை உற்றான்.
(தான் விட்ட உருத்திரப் படை செயலற்றதை) அரசன் - இந்தக்
கௌசிகன்; கண்டனன் - பார்த்தான்; காணா - (அவ்வாறு) பார்த்து;
திண்திறல் வலியும் - உறுதியான வெற்றியும் வலிமையும்; தேசும் -
ஒளியும்; கலை மறை - வேதக் கலைகளை அறிந்த; முனிவர்க்கு
அல்லால் - முனிவர்களுக்கு மாத்திரம் அல்லாமல்; உள எனல் -
(பிறர்க்கு) உள்ளன என்று கருதுதல்; சீரிது அன்று - சிறப்பானது
அல்ல; மண்டலம் முழுதும் - உலகம் முழுவதையும்; காக்கும்
மொய்ம்பு - அரசாளும் வலிமை; ஒரு வலி அன்று - (முனிவர்
வலிமைக்கு முன்) ஒரு வலிமையாக மாட்டாது; என்னா - என்று
உறுதியாக அறிந்து; ஒள்தவம் புரிய எண்ணி - சிறந்த தவத்
தைச் செய்ய நினைத்து; உம்பர்கோன் - தேவந்திரனது; திசையை
உற்றான் - திசையான கிழக்குத் திக்கை அடைந்தான்.
அரசர் ஆற்றலைவிட முனிவர் ஆற்றலே சிறப்புடையது என்பதை
அறிந்த கௌசிகன் அதைப் பெறக் கருதித் தவம் செய்யச் சென்றான்.
திறல் - வெற்றி; திறல் வலி - வெற்றிக்குக் காரணமான வலிமை. 104
