அகலிகைப் படலம் - 556

bookmark

கௌதமன் அகலிகைக்குச் சாபங் கொடுத்தல்

556.

‘எல்லை இல் நாணம் எய்தி.
   யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
   புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
   ‘’விலைமகள் அனைய நீயும்  
கல் இயல் ஆதி’’ என்றான்;
    கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்.
 
புரந்தரன்   எல்லை இல் - (தன் உடம்பு முழுவதும் சாபத்தால்
கெட்டு  விட்டதனால்)  இந்திரன்  அளவில்லாத;  நாணம் எய்தி  -
நாணத்தை    அடைந்து;    யாவர்க்கும்   -  (தனது  நிலையைப்
பார்த்தவர்கள். கேட்டவர்கள்) எல்லோர்க்கும்;  நகை வந்து எய்த -
பரிகாசச்  சிரிப்பு  வந்தெய்தும்படி; புல்லிய பழியினோடும் - தனக்கு
நேர்ந்த பழியோடும்; போயபின்றை - வானுலகத்திற்குச் சென்ற பின்பு;
மெல்லியலாளை  நோக்கி  -  (அம் முனிவன்)  மெல்லியலாளான
தன் மனைவியைப்  பார்த்து;   விலைமகள்   அனைய   நீயும் -  
(தீய  ஒழுக்கத்தால்)   வேசியைப் போன்ற  நீயும்; கல் இயல் - கல்
வடிவம்; ஆதி என்றான் - ஆகுக என்று சபித்தான்; கருங்கல்ஆய்
- (உடனே)   அவள்  கருங்கல்  வடிவாய்;  மருங்கு  வீழ்வாள் -
பக்கத்திலே வீழ்வாள் ஆயினாள்.

விலைமகள்   அனையவள்:  உண்மையில் அகலிகை நெஞ்சறியக்
கற்பிழந்தவள் ஆகாள். இருந்தும் கௌதமன் சினத்தால் உண்மையை.
ஆராய்ந்து பாராமல்  ‘விலைமகள்  போன்றவள்’  அகலிகை  என்று
கூறுகிறான்.                                             22