அகலிகைப் படலம் - 516
கபிலர் சினத்தால் சகரர் சாம்பராதலும் தூதர்
அரசற்கு அதனை அறிவித்தலும்
516.
‘மூளும் வெஞ் சினத்து அருந் தவன்
முனிந்து. எரி விழப்ப.
பூளைசூடிதன் நகையினில்
எயில் பொடிந்தனபோல்.
ஆளும் மைந்தர் ஆறு - அயுதரும்
சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு
உரைத்தனர். வேயர்.
பூளை சூடி - சிவன்; பூளை - (மலர்) - முதலாகுபெயர். இதனை
உழிஞை என்பர்.
தவம் கலைந்த கபில முனிவன் கோபத்தால் சீறினான் - அவனது
சாபத்தால் அரச மைந்தர் அறுபதினாயிரவர் சாம்பரானார்கள் -
இச்செய்தி சகரனுக்கு எட்டியது என்பது. 5-7
