அகலிகைப் படலம் - 498
திருமால் பாற்கடலைக் கடையுமாறு கட்டளையிடல்
498.
“மத்து மந்தரம்; வாசுகி
கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர்
வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்;
ஓடதி கொடுத்து.
கத்து வாரிதி மறுகுற.
அமிழ்து எழக் கடைமின்;
மந்தர மலை- மத்து; வாசுகி என்னும் பாம்பு - கடை கயிறு;
சந்திரன் - அடை தூண்; தேவர். அசுரர் - இருபக்கமும் கயிற்றைப்
பிடித்துக் கடைபவர்; ஓடதி - ஓஷதி;அமிர்த வல்லி என்னும் மூலிகை.
இழந்த செல்வங்களைப் பெறும் பொருட்டுப் பாற்கடலைக்
கடையுமாறு அத்தேவர்களுக்குத் திருமால் கட்டளையிட்டான் என்பது.
3-19
