அகலிகைப் படலம் - 489

bookmark

489.    

‘தழங்கு பேரியும். குறட்டொடு
   பாண்டிலும். சங்கும்.
வழங்கு கம்பலை மங்கல
   கீதத்தை மறைப்ப.
முழங்கு நான்மறை. மூரி நீர்
   முழக்கு என. உலகை
விழுங்க. மால் வரும் விழா அணி
   கண்டு உளம் வியந்தான்.
 
‘மங்கல     கீதத்தை  மறைப்ப’   -   இந்திரனுக்கு  இனிமேல்
வரவிருக்கின்ற  துன்பத்தைக்   குறிப்பாக  உணர்த்துவது - அமங்கலம்.
பூமிக்கு முன்பு கடல் படைக்கப்பட்டது - அதனால் ‘மூரிநீர்’ என்றார்.

பேரிகை     முதலான  பலவகை  வாத்தியங்கள்  முழங்கும்  ஓசை
ஓங்கவும் நான்மறை ஓசை   ஒலிக்கவும் இந்திரன் உலாவரும் திருவிழாக்
காட்சியைக் கண்டு துருவாசன் வியந்து நின்றான் என்பது.          3-9