சூடாமணிப் படலத்தின் பாடல்கள்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள்.பாடலத்தின் பாடல்கள் இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
சூடாமணிப் படலம்
சீதையை இராமனிடம் சேர்க்க எண்ணிய அனுமனின் விண்ணப்பம்
உண்டு துணை என்ன எளிதோ உலகின்? அம்மா!
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள்;
அண்ட முதல் நாயகனது ஆவி அனை யாளைக்
கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான்.
கேட்டி, அடியேன் உரை; முனிந்தருளல்; கேள் ஆய்!
வீட்டியிடும் மேல், அவனை வேறல் வினை அன்றால்;
ஈட்டி இனி என் பல; இராமன் எதிர், நின்னைக்
காட்டி, அடி தாழ்வென்; அது காண்டி; இது காலம்;
பொன் திணி பொலங்கொடி! என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க; துயர் விட்டாய்,
இன் துயில் விளைக்க; ஓர் இமைப்பின், இறை வைகும்
குன்றிடை, உனைக் கொடு குதிப்பென்; இடை கொள்ளேன்.
அறிந்து, இடை, அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்,
முறிந்து உதிர நூறி, என் மனச் சினம் முடிப்பேன்;
நெறிந்த குழல்! நின் நிலைமை கண்டும், நெடியோன்பால்,
வெறுங் கை பெயரேன் - ஒருவராலும் விளியாதேன்.
"இலங்கையொடும் ஏகுதிகொல்" என்னினும், இடந்து, என்
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து, எதிர் தடுப்பான்
விலங்கினரை நூறி, வரி வெஞ் சிலையினோர்தம்
பொலங் கொள் கழல் தாழ்குவென்; இது, அன்னை! பொருள் அன்றால்.
அருந்ததி! உரைத்தி-அழகற்கு அருகு சென்று, "உன்
மருந்து அனைய தேவி, நெடு வஞ்சர் சிறை வைப்பில்,
பெருந் துயரினோடும், ஒரு வீடு பெறுகில்லாள்,
இருந்தனள்" எனப் பகரின், என் அடிமை என் ஆம்?
புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்,
விண்டவர் வலத்தையும் விரித்து உரைசெய்கேனோ?
"கொண்டு வருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி கொண்டேன்;
கண்டு வருகிற்றிலென்" எனக் கழறுகேனோ?
"இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால், இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி, நிருதக் குலம் முடித்து, வினை முற்றிப்
பொருக்க அகல்க" என்னினும், அது இன்று புரிகின்றேன்.
இந்துநுதல்! நின்னொடு இவண் எய்தி, இகல் வீரன்,
சிந்தை உறு வெந் துயர் தவிர்ந்து, தெளிவோடும்,
அந்தம் இல் அரக்கர் குலம் அற்று அவிய நூறி,
நந்தல் இல் புவிக்கண் இடர், பின் களைதல் நன்றால்.
வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்
பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்
ஏறு, கடிது என்று, தொழுது இன் அடி பணிந்தான்.
அனுமனின் வேண்டுகோளைச் சீதை மறுத்தல்
ஏய நல் மொழி எய்த விளம்பிய
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு,
ஆய தன்மை அரியது அன்றால் என,
தூய மென்சொல் இனையன சொல்லுவாள்;
அரியது அன்று; நின் ஆற்றலுக்கு ஏற்றதே!
தெரிய எண்ணினை; செய்வதும் செய்தியே;
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு, அது, என்
பெரிய பேதைமைச் சில் மதிப் பெண்மையால்.
வேலையின்னிடையே வந்து, வெய்யவர்,
கோலி, நின்னொடும் வெஞ் சரம் கோத்தபோது,
ஆலம் அன்னவர்க்கு அல்லை, எற்கு அல்லையால்;
சாலவும் தடுமாறும்; தனிமையோய்!
அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ் சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என்பது என்? வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை, நீயும் நினைத்தியோ?
கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில்
அண்டர் ஏவரும் நோக்க, என் ஆக்கையைக்
கண்ட வாள் அரக்கன் விழி, காகங்கள்
உண்டபோது அன்றி, யான் உளென் ஆவெனோ?
வெற்றி நாணுடை வில்லியர் வில் தொழில்
முற்ற, நாண் இல் அரக்கியர், மூக்கொடும்
அற்ற நாணினர் ஆயின போது அன்றி,
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ?
பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரை ஆகிலதேஎனின்,
இற்பிறப்பும், ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்?
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.
வேறும் உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால், இடை
ஆறும் ஐம் பொறி நின்னையும், "ஆண்" எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ?
தீண்டினான்எனின், இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர் மெய்யின்? "இமைப்பின்முன்
மாண்டு தீர்வென்" என்றே, நிலம் வன் கையால்
கீண்டு கொண்டு, எழுந்து ஏகினன், கீழ்மையால்.
நீல் உறு திசைக் கரி திரிந்து நிற்பன
ஆல் உற அனையவன் தலையை வவ்வி, வில்
கால் உறு கணை தடிந்து, இடுவ காண்டியால்.
வேர்த்தது என்று இடை இடை வீசும் தூசுபோல்,
போர்த்து எழு பொலங் கொடி இலங்கை, பூழியோடு
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆடக் காண்டியால்.
வேலை மிக்கு, ஆற்றொடு மீள, வேலை சூழ்
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறாக்
காலனும், வெறுத்து, உயிர் காலக் காண்டியால்.
மணம் கிளர் கற்பகச் சோலை வாவிவாய்,
பிணங்குறு வால் முறை பிடித்து, மாலைய
கணம் கொடு குரக்குஇனம் குளிப்பக் காண்டியால்.
இப் புறத்து அரக்கரை முருக்கி ஏகின,
முப் புறத்து உலகையும் முடிக்க மூட்டலால்,
அப் புறத்து அரக்கரும் அவியக் காண்டியால்.
வேண்டுவது அன்று; யான், விரைவின் வீரனைக்
காண்டலே குறை; பினும் காலம் வேண்டுமோ?
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ?
சேவகன் திரு உருத் தீண்ட, தீய்ந்திலாப்
பூ இலை; தளிர் இலை; பொரிந்து வெந்திலாக்
கா இலை; கொடி இலை;-நெடிய கான் எலாம்.
மேகம் வந்து இடித்து உரும்ஏறு வீழ்கினும்,
ஆகமும் புயங்களும் அழுந்த, ஐந்தலை
நாகம் வந்து அடர்ப்பினும், உணர்வு நாறுமோ?
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?
பொய்ந் நிலை காண்டி; யான் புகன்ற யாவும், உன்
கைந் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன்;
மெய்ந் நிலை உணர்ந்து, நீ விடைதந்து ஈ என்றான்.
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர், மாக் கடல்
தூர்த்தன, இலங்கையைச் சூழ்ந்து, மாக் குரங்கு
ஆர்த்தது கேட்டு, உவந்து இருத்தி, அன்னை! நீ.
நண்ணிய பொழுது, அதன் நடுவண், நங்கை! நீ,
விண் உறு கலுழன்மேல் விளங்கும் விண்டுவின்,
கண்ணனை என் நெடும் வெரிநில் காண்டியால்.
பொங்கு வெங்கதிர் எனப் பொலிய, போர்ப்படை
இங்கு வந்து இறுக்கும்; நீ இடரும் ஐயமும்
சங்கையும் நீங்குதி; தனிமை நீங்குவாய்.
விராவு அரு நெடுஞ் சிறை மீட்கிலான்எனின்,
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு,
இராவணன் அவன்; இவன் இராமன் என்றனன்.
ஓகை கொண்ட் களிக்கும் மனத்தள், உயர்ந்தாள்;
போகை நன்று இவன் என்பது, புந்தியின் வைத்தாள்;
தோகையும், சில வாசகம் இன்னன சொன்னாள்:
வேறி; யான் இனி ஒன்றும் விளம்பலென்; மேலோய்!
கூறுகின்றன, முன் குறி உற்றன, கோமாற்கு
ஏறும் என்று, இவை சொல்லினள் இன்சொல் இசைப்பாள்:
ஆகம் வந்து, எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படை விட்டது, மெல்ல விரிப்பாய்.
மன்ன!" என்றலும், "மாசு அறு கேகயன் மாது, என்
அன்னைதன் பெயர் ஆக" என அன்பினொடு, அந் நாள்,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி-மெய்ம்மை தொடர்ந்தோய்!
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள்,
தன் திருத் துகிலில் பொதிவுற்றது, தானே
வென்றது அச் சுடர், மேலொடு கீழ் உற மெய்யால்,
ஏங்கினாள்; அவ் அனுமனும், என்கொல் இது? என்னா,
வீங்கினான்; வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும்.
அஞ்சலன் என, வெங் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரி சக்கரவாகமுடன், தாழ்
கஞ்சமும், மலர்வுற்றன; காந்தின காந்தம்.
வேந்தன் அன்னது, மெல்லியல்தன் திருமேனி
சேந்தது, அந்தம் இல் சேவகன் சேவடி என்னக்
காந்துகின்றது, காட்டினள்; மாருதி கண்டான்.
ஆடையின்கண் இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை, நல்லோய்!
கோடி என்று கொடுத்தனள், மெய்ப் புகழ் கொண்டாள்.
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து,
அழுது, மும்மை வலம் கொடு இறைஞ்சினன்; அன்போடு,
எழுது பாவையும், ஏத்தினள்; ஏகினன் இப்பால்.
மீண்டு, தம்பியும் வீரனும் ஊர் புக,
பூண்ட பேர் அன்பினோருடன் போதியால்!
ஈண்டு யான் வரம் வேண்டினென், ஈறு இலாய்!
வென்றி வெஞ் சிலையினான் மனம் விழைந்திடாது;
அன்றியே, மறை நெறிக்கு அருகன் அல்லனால்;
பொன் திணி மௌலியும் புனைதல் இல்லையால்.
இற்றது இவ் இலங்கை" என்று, இரங்கி ஏங்கவே,
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக,
பொற்றொடி! நீயும் கண்டு, இரங்கப் போதியால்.
"இங்கு நின் வரவு என்னை" எனக் கனல்வு எய்த,
மங்கை பங்கனொடு எண் திசையும் செல, மற்றோர்
தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய்.
அந்தரத்தினில் நின்றவர் கண்டு, "இனி, அந்தோ!
எந்தைதன் சரண் அன்றி, ஒர் தஞ்சமும் இன்றால்;
வந்து அவன் சரண் வீழ்க!" என உற்றதும் வைப்பாய்.
வையம் வந்து வணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே,
"வெய்யவன் கண் இரண்டொடு போக!" என, விட்ட
தெய்வ வெம் படை உற்றுள தன்மை தெரிப்பாய்.
முந்தை உன் குறையும் பொறை தந்தனம்; முந்து உன்
சந்தம் ஒன்று கொடித் திரள் கண்கள்தமக்கே
வந்து ஒர் நன் மணி நிற்க!" என, வைத்ததும் வைப்பாய்.
போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு பொழிந்தார்;
நாக நம்பன் இளங் கிளை நன்கு உணராத,
பாகு தங்கிய வென்றியின், இன் சொல் பணிப்பாய்.