நகர் நீங்கு படலம் - 1871
1871.
கிளையினும், நரம்பினும், நிரம்பும் கேழன,
அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்,
தொளை படு குழலினோடு, யாழ்க்குத் தோற்றன -
இளையவர் அழுதினும் இனிய சொற்களே.
இளையவர் அமுதினும் இனிய சொற்கள்- இளைய அத்தேவியரின்
அமுதத்தைக் காட்டிலும்இனிமையான சொற்கள்; அளவு இறந்து உயிர்க்க
விட்டு அரற்றும் தன்மையால் -அளவில்லாமல் பெருமூச்சு விட்டு
அழுகின்ற காரணத்தால்; கிளையினும் நரம்பினும் நிரம்பும்கேழன -
மூங்கிலாலும், நரம்பாலும் செய்யப் பெற்றனவாகிய; தொளைபடு
குழலினோடுயாழ்க்குத் தோற்றன - உள்தொளை உடைய
புல்லாங்குழலோடு யாழிசைக்குத் தற்போது தோற்றுப்போயின.
கிளை - மூங்கில். ஆகுபெயராய்ப் புல்லாங்குழலின் இசையைக்
குறித்தது. நரம்பும்அவ்வாறே யாழிசையைக் குறித்தது. கேழன - சுவை
உடையன முன்பு அம்மகளிர் குரல் ஒலி குழலையும்யாழையும் வென்றது.
இப்போது அமுது அரற்றிய காரணத்தால் தோற்றது என்பதாம். 176
