வேள்விப் படலம் - 466

bookmark

இலக்குவன் இராமபிரானிடம் கூறுதல்

466.

கண்ட அக் குமரனும். கடைக் கண் தீ உக.
விண்தனை நோக்கி. தன் வில்லை நோக்கினான்;
‘அண்டர் நாயக! இனிக் காண்டி. ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன’ என. தொழுது சொல்லினான்.
   
கண்ட  அக்குமரனும்  -   இராமபிரான்  காட்டக்  கண்ட  அந்த
இளையவனான  இலக்குவனும்;  கடைக்  கண்ட  தீ  உக  -  கடைக்
கண்களிலே   தீ  சிதறும்படியாக; விண்தனை நோக்கி - வானத்தையும்
பார்த்து;  தன் வில்லை நோக்கினான் - தனது வில்லையும் பார்த்தான்
(பின்பு);   அண்டர்  நாயக  -  (இராமனைப் பார்த்து) தேவர்களுக்குத்
தலைவனே!;  இனி  வீழ்வன  இவர்  துன்டம் - இனி. கீழே வீழ்வது
இவர்களுடைய  உடலின்  துண்டங்களே; ஈண்டு காண்டி - இப்போதே
காண்பாயாக;  என. தொழுது  சொல்லினான்  -  என்று  இராமனை
வணங்கிக் கூறினான்.   

அக்குமரன்:   இளையவன்.  ‘கடைக்கண்’:  கண்கடை சொல் மாற்று.
உக:   கக்க.   அண்டர்:  தேவர்கள்.  துண்டம்:   சிதைந்த   துணுக்கு.
‘வீழ்வன’   வினையாலணையும்  பெயர்.  விண்தனை:   ‘தன்’   அசை
விண்ணை   நோக்கி.  வில்லையும்  நோக்கினான்   என்பது   இராமன்
ஆணையை எதிர்நோக்கி நின்றான் என்க.                       47