வேள்விப் படலம் - 453

bookmark

குறளன் நெடியோனாதல்

453.

கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.
 
கயம் தரு நறும்  புனல் - குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான
நீர்; கையில்  தீண்டலும் -  தனது  கைகளில்  தீண்டபப்பட்டவுடனே;
பயந்தவர்களும்  இகழ் குறளன்  -   பெற்றவரும்    இகழும்படியான
குறுகிய  வடிவு  கொண்ட வாமன மூர்த்தி; எதிர்பார்த்து வியந்தவர் -
எதிர்நின்று   பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; வெருக்கொள -
அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு  உதவிய  உதவி  ஒப்ப  -  அறிவு
ஒழுக்கங்களில்    சிறந்த    மேலோருக்குச்   செய்த   உதவி  சிறந்து
விளங்குவதுபோல;  விசும்பின்  ஓங்கினான்  - வானத்தின் அளவுக்கு
வளர்ந்து நின்றான்.  

கயம்:   குளம்.  நறும்புனல்:  தெளிந்து குளிர்ந்துள்ள நீராம். உதவி
வரைத்தன்று  உதவி  உதவி   செயப்பட்டார் சால்பின் வரைத்து என்ற
குறட்கருத்துத்   தோன்ற.  உயர்ந்தவருக்கு   உதவிய  உதவி   சிறந்து
விளங்குவது போல. வாமன மூர்த்தி வானுற  ஓங்கி. வளர்ந்து  நின்றான்
என்பது  கருத்து.  பயந்தவர்: பெற்றோர்  (தாய். தந்தையர்).  வியத்தல்:
ஆச்சரியபடுதல் வெருக்கொள: அச்சமுற.                      34