வேள்விப் படலம் - 436
மாவலி வரலாறு (436-452)
மாவலி மூன்றுலகும் வௌவுதல்
436.
‘ஆனவன் இங்கு உறைகின்ற அந்நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்.
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்;
ஆனவன் இங்கு உறைகின்ற அந்நாள்வாய் - அத்தகைய
திருமால் இங்கு வாழ்ந்து வருகின்ற அந்தக் காலத்திலே; ஊனம்
இல்ஞாலம் ஒடுங்கும் எயிற்று - குற்றமற்ற இவ்வுலகம் ஒடுங்கத்
தகுந்த இரு பற்களை உடைய; ஆண் ஏனம் எனும் திறல் -
ஆதிவராகத்தோடு ஒப்பு கூறத்தக்கவன் இவனே என்னுமாறு; மாவலி
என்பான் - மகா பலி என்னும் பெயருடைய அசுரர்குலத் தலைவன்;
வானமும் வையமும் - விண்ணுலகத்தையும். மண்ணுலகத்தையும்.
வவ்வுதல் செய்தான்- கவர்ந்து தனக்குரியதாக்கிக் கொண்டான்.
ஆன+அவன்: ஆனவன் அகரம் தொக்கது. ‘அந்நாள்வாய்’ இதில்
‘வாய்’ ஏழனுருபு. ஊனம்: குறைபாடு. ‘எயிறு’ இங்குப் பற்களாகும்.
‘ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் ஏனம்’ உலகத்தைத் தனது ஒற்றைக்
கொம்பிலே தாங்கிய வராக மூர்த்தியை இவ்வாறு சிறப்பிக்கிறார்.
‘’பன்றியால் படி எடுத்த பாழியான்’’ என்பர்; அது உன். வென்றியார்
உன்னெயிற்றின் மென்துகள் போன்று இருந்ததால்’’ என்ற அஷ்டப்
பிரபந்தப் பாடல் ஒப்பிடத் தக்கதாம். வையம்: பூமி.
ஆதிவராகத்தை ஒத்த வலிமைபடைத்த மகாபலி. விண்ணையும்.
மண்ணையும் கவர்ந்த தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டான் என்க. 17
