மிதிலைக் காட்சிப் படலம் - 580

bookmark

மகளிர் வட்டாடும் இடங்கள்

580.

கடகமும். குழையும். பூணும்.
   ஆரமும். கலிங்க நுண் நூல்
வடகமும். மகர யாழும்
   வட்டினி கொடுத்து. வாசத்
தொடையல் அம் கோதை சோர.
   பளிக்கு நாய் சிவப்பத் தொட்டு;
படை நெடுங் கண்ணார் ஆடும்
   பண்ணைகள் பலவும் கண்டார்.* 
 
கடகமும்     குழையும் -   கைவளைகளையும் காதணிகளையும்;
பூணும்   ஆரமும்   -   மேலும்   பல  அணிகளையும்  இரத்தின
மாலைகளையும்; நுண்  நூல்  - மெல்லிய நூல் இழைகளால் நெய்யப்
பெற்ற;  கலிங்கம்  வடகமும்  -   கலிங்க   நாட்டு விலையுயர்ந்த
மேலாடைகளையும்; மகர யாழும் -  மகர விணைகளையும்; வட்டினி
கொடுத்து  - பந்தயப் பொருளாக  வைத்து;  வாசத்தொடையல் -
மணமுள்ள பூமாலைகளை அணிந்த; அம் கோதை சோர - அழகான
(தம்) கூந்தல் தளரும்படி; பளிங்கு  நாய்  -  பளிங்கால்  அமைந்த
நாய்  எனப்படும் காய்கள்;   சிவப்பத்    தொட்டு   -  செந்நிறம்
அடையுமாறு    (அவற்றைத்    தம்   செங்கைகளால்)     தொட்டு;
படைநெடுங்கண்ணார் - வேல்   போன்ற நீண்ட  கண்களையுடைய
பெண்கள்;   ஆடும்   பண்ணைகள்  - விளையாடுகிற   இடங்கள்;
பலவும்   கண்டார்   -  பலவற்றையும் பார்த்தார்கள்.

கலிங்க     நுண்ணூல் - ‘விலை வரம்பு அறியலாகா  இன்னுரைக்
கலிங்கம்’  -  சிந்தா:  697.  பளிங்கு  நாய்:  ‘பலகை செம்பொனாகப்
பளிங்கு நாயாய்ப் பரப்பி’ - சிந்தா:927. வடகம்: மேலாடை;பண்ணை;
விளையாடும் இடம்.                                       17