பேய் அருகில்
அவன் அலறிக் கொண்டே தேடினான் நான் மெல்ல கண்களை திறந்து பார்த்தால் அந்த கூடை என் முன்னே கிடந்தது.நான் கண் மூடி என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்கு முன் அந்த பேய் என்னை தன் பக்கம் இழுத்தது.
அதன் கை உடும்பு பிடியாய் என் கைகளை பற்றி இருந்தது அதனை விலகி கொள்ள முடியவில்லை நான் அந்த பயத்தில் அப்படியே மயங்கி விழுந்து விட்டேன் அதற்கு பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
அது கடித்து குதறி வைத்து இருந்த அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். மெல்ல மெல்ல சாப்பிடும் சத்தமும் லேசாக உறுமலும் கேட்டது. அந்த பேயின் மூச்சு விடுவதே பயங்கர கோபத்துடன் மூச்சு விடுவது போல இருந்தது. எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தான்.
அதற்குள் சிதறி ஓடிய என் நண்பர்கள் ஒன்று சேர்ந்து என்னை தேட ஆரம்பித்து இருந்தார்கள் அனைவரும் மீண்டும் காட்டில் வர யோசிக்கவே சிலர் மட்டும் கையில் டார்ச் எடுத்துக் கொண்டு கிளம்பினர் .
நான் தொலைந்த தகவல் வீட்டிற்கு சொல்லப்பட்டது. நண்பர்களை திட்டித் தீர்த்து விட்டாள். அந்த இரவிலும் விளக்கு ஏற்றி ஏதோ மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தாள்.
