பல்லவர் கால ஓவியங்கள்

bookmark

தமிழ் நாட்டு ஓவியக் கலை வளர்ச்சியில் பல்லவர் காலத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. ஒவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தது மட்டுமன்றிப் பல்லவ மன்னர்கள் சிலர் சிறந்த ஓவியர்களாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. பல்வமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக் கலையில் சிறந்து விளங்கியதை அவனது பட்டப் பெயர்களான விசித்திரசித்தன், சித்திரகாரப்புலி ஆகிய பட்டப் பெயர்கள் மூலம் அறியலாம். மாமண்டூர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனைமலை, ஆர்மாமலை ஆகிய இடங்களில் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன.