நாயக்கர் கால ஓவியங்கள்
நாயக்கர் காலத்து ஓவியங்கள் தமிழ் நாட்டில் செங்கம் வேணுகோபாலசாமி கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், அழகர் கோயில், திருகோகர்ணம் கோகர்ணேசுவரர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் போன்ற பல இடங்களில் காணப்படுகின்றன.
17 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஆண்ட மராட்டியரும் தமிழ் நாட்டு ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள். தற்காலத்தில் தஞ்சாவூர் ஓவியப் பாணி என்று அறியப்படுவது இவர்கள் காலத்தில் உருவானதே.
