நாட்டுப் படலம் - 85

bookmark

பண்டங்கள் பெய்த பண்டிகள்

85.

எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,
தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே.
 
எள்ளும்   ஏனலும் இறுங்கும் சாமையும் கொள்ளும் - எள்ளும்,
தினையும்,   சோளமும்,   சாமையும்,   கொள்ளும்;   கொள்ளையில்
கொணரும்  பண்டியும்-  மிகுதியாகக்  கொண்டு  வரும் வண்டிகளும்;
அள்ளல்  ஓங்கு  அளத்து  அமுதின்  பண்டியும்-  சேறு  நிறைந்த
உப்பளத்திலிருந்து;   -     உப்பைக்  கொண்டு  வரும்  வண்டிகளும்;
துள்ளும்  நீர்மையில்  தலை  மயங்கும்-  பாரமிகுதியால்  இயல்பாக
ஓட்டிச்  செல்ல  இயலாது    ஆட்கள் தள்ளும் தன்மையால் ஒன்றுடன்
ஒன்று கலப்பதாகும்.

தலை       மயங்கும்: தம்மில் ஒன்றுபட்டுக் கலக்கும். இதற்கு இடம்
மாறுபடும்    என்று பொருள் கூறுவதுமுண்டு. ஓரிடத்தில் விளைந்த எள்
முதலியவை    அவை   விளையாத  வேறு  இடங்களுக்குக்  கொண்டு
செல்லப்படுவதால் “இடம் மாறும்” என்பதும் பொருந்தும்.          54