நாட்டுப் படலம் - 74
அந்நாட்டு அலர்வன இவை எனல்
74.
இடைஇற மகளிர்கள், எறி புனல் மறுகக்
குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன, கமலம்.
இடை இற, மகளிர்கள் எறிபுனல் மறுக, குடைபவர்-தங்கள இடை
ஒடிவது போலத் தோன்றும் பெண்கள் அலையடிக்கும் நீர் கலங்க
நீராடுபவர்களின்; துவர் இதழ் என - பவளம் போன்ற சிவந்த
உதடுகளைப் போல; குமுதம் மலர்வன - குமுத மலர்கள்
மலர்வனவாகும்; மடைபெயர் அனம் என- நீர்மடைகளில் வாழும்
அன்னங்களைப் போல; மடநடை அளகம் - மெல்லிய நடையையும்,
அழகிய கூந்தலையும் உடைய; கடைசியர் முகம் என- அந்நாட்டு
உழத்தியரின் முகம் போல; கமலம் மலர்வன - தாமரை மலர்கள்
மலர்வனவாகும்.
குமுதம் பெண்களின் வாயிதழ்களைப் போல மலர்ந்தன. தாமரை
உழத்தியரின் முகம் போல மலர்ந்தன என, உவமானத்தை
உவமேயமாகக் கூறியதால் ‘எதிர்நிலையணி’ யாகும். 43
