நாட்டுப் படலம் - 56

bookmark

எருமைப்பாலால் நெற்பயிர் வளர்தல்

56.

ஈர நீர் படிந்து, இந் நிலத்தே சில
கார்கள் என்ன, வரும், கரு மேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட, மென் முலை
தாரை கொள்ள, தழைப்பன சாலியே. 
 
ஈர நீர் படிந்து-  குளிர்ந்த நீரிலே மூழ்கி எழுந்து; இந் நிலத்தே-
(வானத்தில்  அல்லாது)  இந்த  நிலத்திலே; சில கார்கள் என்ன-  சில
மேகங்களைப்   போல;  கரு  மேதிகள்  வரும்-  கருமை  நிறமுள்ள
எருமைகள்  நடமாடும்;  ஊரில்  நின்ற-  ஊரிலே தங்கிவிட்ட; கன்று
உள்ளி- கன்றை  நினைப்பதாலே;  மென்  முலை  தாரை கொள்ள-
மென்மையான   மடியிலிருந்து   பால்   தாரை   சொரிவதால்;  சாலி
தழைப்பன- (அந்தப் பாலால்) செந்நெற் பயிர்கள் தழைக்கின்றன.

வானத்திலே  கரு மேகம்; நிலத்திலே கரு மேதி -மேய வரும்போது
ஊரில்  விட்டுவந்த  கன்றை  நினைத்த மாத்திரத்திலே   பால் சொரிய,
அந்தப்    பால்    வெள்ளமெனப்    பாய்ந்து,     செந்நெற்   பயிர்
தழைத்தனவாம்.  வீறுகோளணி  என்பர்.  மேல்  44ஆம்   பாடலிலும்
கன்றை நினைத்து எருமை பால் சொரியும் செய்தி வந்தது.         25