நகரப் படலம் - 155
தோரணம் தரெு புரவிப்பந்தி இவற்றின் சிறப்பு
155.
இரவியின் சுடர் மணி இமைக்கும். தோரணம்;
தெருவினின் சிறியன. திசைகள்; சேண் விளங்கு
அருவியின் பெரியன. ஆனைத் தானங்கள்;
பரவையின் பெரியன. புரவிப் பந்தியே.
தோரணம் இரவியின் சுடர்மணி இமைக்கும் - அந்த நகரத்துத்
தோரணங்கள் சூரியன் போன்ற சுடர்மிகு மணிகளால் ஒளிரும்;
திசைகள் தெருவினின் சிறியன - நெடிய வீதிகளைவிடத் திசைகள்
சிறியனவாம்; சேண்விளக்கு அருவியின் பெரியன ஆனைத்
தானங்கள்- மலையின் மிக உயர்ந்தே இருக்கும் அருவியை விட
யானையின் மதநீர் பெரியதாகும்; பரவையின் பெரியன புரவிப்
பந்தி -கடல்களை விடவும் பெரியது. அந்நகரத்தில் குதிரைகள் கட்டும்
இடம்.
திசைகள் தெருவினில் சிறியன என்றது உயர்வு நவிற்சியின் எல்லை.
தானம்: மதநீர்; பந்தி: குதிரை கட்டும் லாயம்; சேண்: உயரம்;
சுடர்மணி வினைத்தொகை. 63
