நகரப் படலம் - 149

bookmark

மாலை மணிகளைக் கழுவுதல்

149.

இளைப்ப அருங் குரங்களால், இவுளி, பாரினைக்
கிளைப்பன; அவ் வழி, கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி; அவை ஒளிர, மீது தேன்
துளிப்பன, குமரர்தம் தோளின் மாலையயே.
 
இவுளி   இளைப்ப அரும்  குரங்களால்-   குதிரைகள் வீதியிலே
ஓடும்பொழுது   தமது   குளம்புகளால்;    பாரினைக்   கிளைப்பன-
நிலைத்தைக்  கிளறுகின்றன;  அவ்வழி  கிளர்ந்த தூளியின்- அங்குக்
கிளர்ந்து    மேலெழுந்த    புழுதியினாலே; மணி  ஒளிப்பன-  (அக்
குதிரைகளின்  மீது  ஏறிவரும்  வீரர்கள்  அணிந்த) மணிகள் மறைவன
ஆயின; அவை ஒளிர -அம் மணிகள்  மறுபடியும்  ஒளிவீசுமாறு;  மீது
குமரர்தம் தோளின் மாலை  தேன்  துளிப்பன-  அவற்றின் மேலே
வீரர்கள்   தோள்களில்  அணிந்த   மாலைகள்  தேன்   துளிகளைச்
சொரிந்தன.

குதிரைச்     சவாரி  செய்யும்  வீரர்கள் அணிந்த அணிகலன்களில்
பதிந்த  மணிகள்  அக்குதிரைகளின்   குளம்புகள்  கிளறிய  புழுதியில்
மறைய   அவை  ஒளிரும்படி  மாலைகள்  தேன்பொழியும்    என்பது
கருத்து.                                                   57