நகரப் படலம் - 115
கோபுர அமைப்பும் சிற்பச் சிறப்பும் (115-118)
115.
தா இல் பொன் - தலத்தின், நல்
தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயர்த்த கற்பகப் பொதும்பர்
புக்கு ஒதுங்குமால்-
ஆவி ஒத்த அன்பு சேவல்
கூவ வந்து அணைந்திடா
ஓவியப் புறாவின் மாடு
இருக்க ஊடு பேடையே.
ஆவி ஒத்து சேவல் கூவ- தனது உயிருக் கொப்பான ஆண்
புறாவானது கூவி அழைக்கவும்; அன்பின் வந்து அணைந்திடாது-
அன்புடன் வந்து தழுவிக் கொள்ளாமல்; ஓவியப் புறாவின் மாடு
இருக்க- அந்த வாயிலின் புறத்தே சித்திரத்தில் அமைந்துள்ள பெண்
புறாவின் பக்கம் (ஆண் புறாஉடன்); இருந்ததால் ஊடுபேடை-
ஊடல்கொண்ட பெண்புறா; தாஇல் பொன்தலத்தில்- குற்றமற்ற தேவ
உலகிலே; நல்தவத்தினோர்கள் தங்கு- நல்ல தவம் செய்தவர்கள்
தங்கியுள்ள; தாள் பூவுயிர்த்த- தாளை உடையதும் மலர்கள்
பூத்திருப்பதுமான; கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுங்குமால்- கற்பகச்
சோலையிலே சென்று மறைந்திருக்கும்.
கோபுர வாயிலில் வாடும் ஆண்புறா, ஓவியப் புறாவை உண்மை
என நினைத்து அதன் அருகிருக்கும் அதனைக் கண்டு ஊடிய
பெண்புறா விண்ணுலகத்தின் கற்பகச் சோலையிலே புகுந்து
மறைந்திருக்கும். இது மயக்கவணி. கற்பகம்: நினைத்ததைத் தருவது.
சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், அரிசந்தனம் என்ற ஐவகை
மரங்கள் நிறைந்திருப்பது இச்சோலை என்பர். தாவில்: குற்றமில்லாத.
தாள்: அடி நாளமும் ஆம். 23
