திருப்பாடல் 117
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி பறைசாற்றுங்கள்.
1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! -பல்லவி
2. ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது.
ஆண்டவரைப் போற்றுங்கள்!
ஆண்டவரைப் புகழுங்கள்! -பல்லவி
