திரு அவதாரப் படலம் - 292
292.
‘ஆலையும் புதுக்கு; அந்தணாளர்தம்
சாலையும். சதுக்கமும். சமைக்க. சந்தியும்;
காலையும் மாலையும். கடவுளர்க்கு. அணி
மாலையும் தீபமும். வழங்குக’ என்றனன்.
ஆலையம் புதுக்குக - கடவுளர் கோவில்களை எல்லாம்
புதுப்பியுங்கள்; அந்தணாளர் தம் சாலையும் சதுக்கமும் சமைக்க -
அறவோர் சாலைகளையும் நாற்சந்திகளையும் அமையுங்கள்; காலையும்
சந்தியும் மாலையும் - அந்தி நேரம். காலை. மாலை ஆகிய
வேளைகளில்; கடவுளர்க்கு அணிமாலையும் தீபமும் வழங்குக
என்றனன் - கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கு அழகிய மலர்
மாலைகளும் தீபங்களும் வழங்குங்கள் என்றான்.
ஆலையம்: கோவில் (தேவாலயம்). புதுக்குக. சமைக்க. வழங்குக
என்பன வியங்கோள் வினைமுற்றுகள். சதுக்கம்: நாற்சந்தி. சந்தி:
இருபொழுது கூடும் காலம்; காலைச்சந்தி. மாலைச்சந்தி. என்பன.
வழங்குக. மிகுதியாகக் கொடுங்கள் என்பது குறிப்பாகும். அணிமாலை:
வினைத்தொகை 112
