திரு அவதாரப் படலம் - 265
புத்திரகாமயாகம் செய்தல்
265.
முகமலர் ஒளிதர் மொய்த்து. வான் உளோர்.
அக விரை நறு மலர் தூவி. ஆர்த்து எழ.
தகவுடை முனியும். அத் தழலின் நாப்பணே.
மக அருள் ஆகுதி வழங்கினான்அரோ.
வான் உளோர் முகமலர் ஒளிதர மொய்தது - வானுலகில்
வாழுகின்ற தேவர்கள் எல்லாம் தங்கள் முகங்களாகிய தாமரை
மலர்கள் ஒளி தருமாறு அங்கு வந்து நெருங்கி நின்று; அகவிரை
நறுமலர் தூவி - உள்ளே மணம் மிகுந்த மலர்களைச் சொரிந்து;
ஆர்த்து எழ - ஆரவாரம் செய்து எழ; தகவு உடை முனியும் -
தகுதியுடைய அந்தக் கலைக்கோட்டு முனிவனும்; தழலின் நாப்பண் -
அந்த வேள்வித் தீயின் நடு இடத்திலே; மகவருள் ஆகுதி
வழங்கினான் - பிள்ளைப் பேற்றைத் தரவல்ல ஆகுதியைக்
கொடுத்தான்.
முகமலர்: முகமாகிய மலர் என்பதால் உருவகம். மொய்த்தல்:
நெருங்குதல். விரை: மணம். நறுமலர்: பண்புத்தொகை. தூவி என்பதில்
‘தூ’ பகுதி. நாப்பண்: நடுவிடம். ஆர்த்து ஆரவாரித்து. ஆகுதி:
இங்குப் ‘பூர்ணாகுதி’ யாம். தகவு: தகுதி (வேள்வியை நடைபெறச்
செய்யும் தகுதியாம்). அரோ: அசை. உள்ளோர்: உளோர் எனத்
தொகுக்கப்பட்டது.
வானுவோர் - தூவி - மொய்த்து - எழ - முனியும் - ஆகுதி
வழங்கினான் என இயைக்க. 85
