திரு அவதாரப் படலம் - 259
259.
என்றன பற்பல இனிமை
கூறி. ‘நல்
குன்று உறழ் வரி சிலைக்
குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம்
நடத்த எண்ணியோ.
இன்று எனை அழைத்தது இங்கு?
இயம்புவாய்!’ என்றான்.
என்றன பற்பல இனிமை கூறி- என்று பலபல இனிய மொழிகளை
இயம்பி; நல் குன்று உறழ் வரிசிலை குவவுத் தோளினாய் - நல்ல
மலையை ஒத்ததும். கட்டமைந்த வில்லைத் தாங்கி இருப்பதுமான
திரண்ட தோள்களை உடையவனே!; நன்றி கொள் அரிமகம் நடத்த
எண்ணியோ - நன்மை பயக்கும் அசுவமேத வேள்வியை
நடத்துவதற்கு நினைத்தோ; இன்று இங்கு என்னை அழைத்தது
இயம்புவாய் என்றான் - இன்று. இங்கு என்னை அழைத்த
காரியத்தைச் சொல்லுவாய் என்று கலைக்கோட்டு முனிவன்
கேட்டனன்.
இனிமை என்னும் பண்புப் பெயர் அப்பண்பை உடைய சொற்களை
உணர்த்தி குணிப் பெயராக நின்றது. உறழ்: உவம உருபு. நன்றி:
நன்மை. பண்புப்பெயர் அரிமகம்: அசுவமேத யாகம் என்னை என்பது
‘எனை’ எனத் தொகுக்கப்பட்டது. கலைக்கோட்டு முனிவன். தன்னை
அழைத்த காரணத்தைத் தயரதனிடம் வினவினான் என்பது கருத்து. 80
