திரு அவதாரப் படலம் - 247

bookmark

கலைக்கோட்டு முனிவரவைத் தசரதன் அறிதல்

247.

தூதுவர் அவ் வழி அயோத்தி துன்னினார்;
மாதிரம் பொருத தோள் மன்னர்மன்னன்முன்
ஓதினர். முனி வரவு; ஓத. வேந்தனும்.
காதல் என்ற அளவு அறு கடலுள் ஆழ்ந்தனன்.
 
அவ்வழி  தூதுவர்- (பிறர் வருகையைத் தெரிந்து  சொல்ல)  அந்த
வழியில்   (நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த)  தூதுவர்கள்  -    அயோத்தி
துன்னினார்  -  அயோத்தி  நகரை அடைந்தனராகி.  மாதிரம்  பொருத
தோள்   மன்னர்   மன்னன்   முன்   -    எல்லாத்திசைகளிலுமுள்ள
வேந்தர்களை  வென்ற  தோள்களையுடைய    வேந்தர்கள் வேந்தனான
தயரதனுக்கு   முன்  நின்று;  முனிவரவு  ஓதினர்  -  கலைக்கோட்டு
முனிவனது வருகையைத் தெரிவித்தனர்; ஓத.வேந்தனும்  காதல் என்ற
அளவறு  கடலுள்  ஆழ்ந்தனன் - அவ்வாறு கூற. தயரத  வேந்தனும்
‘அன்பு’  என்னும்  அளக்க  இயலாத  கடலுக்குள்  மூழ்கினவனானான்;
அவ்வழி - அப்போது என்றும் கூறலாம்; துன்னி - நெருங்கி; மாதிரம்
-  திசை (இடவாகு பெயராகத் திக்கில் வாழ்பவரை  உணர்த்தும்);  முன்
- திருமுன் என்பது பொருள்.

தூதுவர்: துன்னினர்: ஓதினர்;  ஓத:  கடலுள்   ஆழ்ந்தனன் என்பது
பொருள் முடிவு.

முனிவன்   தான் எதிர் நோக்கியவாறு: வருவதனை  அறிந்து அன்பு
நிறைந்த மனத்தினனானான் என்பதை: காதல்  என்ற  அளவறு  கடலுள்
ஆழ்ந்தனன் என்று கூறியதன் நயம் மகிழ்தற்குரியது.

ஆறு  கடலுள் ஆழ்ந்து. ஆம் தயரதன்  என்ற  பேராறு:   ‘காதல்’
என்ற   “அளப்பருங் கடலில் ஆழ்ந்தது” என்கிறார்.              68