திரு அவதாரப் படலம் - 202
202.
என்று அவன் உரைத்தபோது. எழுந்து துள்ளினார்;
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
‘மன்றல் அம் செழுந் துளவு அணியும் மயனார்
இன்று எமை அளித்தனர்’ என்னும் ஏம்பலால்
என்று அவன் உரைத்த போது- அத்திருமால் கூறியருளிய போது
கேட்ட (அத்தேவர்கள் அனைவரும்); மன்றல் அம் துளவு அணியும்
மாயனார்- மணம் பொருந்திய. அழகிய துழாய்மாலை அணியும்
மாயனாகிய திருமால்;இன்று எமை அளித்தனர் என்னும் ஓம்பலால்-
இன்று எங்களை யெல்லாம் காப்பாற்றி அருளினார் என்னும்
மகிழ்ச்சியால்; எழுந்து துள்ளினார் நன்றிகொள் மங்கல நாதம்
பாடினார்- எழுந்து நின்று ஆடினார்கள் நன்மையான மங்கல கீதம்
பாடினார்கள்.
துள்ளுதல்: ஆடுதல். நன்றி: நன்மை. மங்கலம்: சுபம். இங்கு
வெற்றிக் குறித்து நின்றது. நாதம்: ஓசை. இசையைக் குறித்தது. மன்றல்:
மணம். மாயம்: சாமர்த்தியம் அதனை உடையவன் மாயன். ஏம்பல்:
மகிழ்ச்சி. திருமால் கூறியது கேட்ட தேவர்கள் மகிழ்ச்சியால்
ஆடிப்பாடினர் என்பது கருத்து. 23
