திரு அவதாரப் படலம் - 190

bookmark

190.    

திரைகெழு பயோததி துயிலும் தெய்வவான்
மரகத மலையின் வழுத்தி நெஞ்சினால்
கரகமலம் குவித்து இருந்து காலையில்-
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன்.
 
திரை கெழு பயோததி துயிலும்- அலைகள் கெழுமிய  பாற்கடலில்
பள்ளிகொண்டிருக்கும்;    தெய்வ    வான்  மரகத   மலையினை-
தெய்வத்தன்மை    பொருந்திய    உயர்ந்த    மரகதமலை   போன்ற
திருமாலை; நெஞ்சினால் வழுத்தி- மனத்தால் வணங்கித்  துதித்து; கர
கமலம்   குவித்து-தாமரை   போன்ற   கைகளைக்  கூப்பி;  இருந்த
காலையில்- (தியானித்து)  இருந்தபோது;  பரகதி  உணர்ந்தவர்க்கு -
மேலான   கதியிது   என   உணர்ந்து    துதிப்பவர்களுக்கு;   உதவு
பண்ணவன்- காலம் தாழ்த்தாது உதவும்திருமால்

‘வந்து  தோன்றினான்’ என்ற அடுத்த பாடல் தொடருடன்  பொருள்
முடிவு  பெறும்.  கெழு:  கெழு  முதல் (பெருகியிருத்தல்)   பயம்: பால்.
உததி:  கடல்;  பயோதறி:  பாற்கடல். மரகதம்: பச்சை நிறமணி.  மரகத
மலை:  பச்சை  மாமலை போன்ற திருமால் உணர்த்தும்   உவமையாகு
பெயர்.   பரகதி:   மேலாம்துணை.  பண்ணவன்:    மெய்ஞ்ஞானியாம்.
நெஞ்சினால்  வழுத்தல்:  மனத்தால்  துதித்தல்.    கரகமலம் குவித்தல்:
கைகளால் தொழுதல். கரகமலம்: உருவகம்.                      11