திரு அவதாரப் படலம் - 189
189.
‘இருபது கரம். தலை ஈர்-ஐந்து. என்னும் அத்
திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.
கரு முகில் என வளர் கருணைஅம் கடல்
பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.
கரம் இருபது தலை ஈரைந்து என்னும்- இருபது கைகளும். பத்துத்
தலைகளும் உடையவன் என்று சொல்லப்படும்; அத்திருவிலி வலிக்கு-
அந்த அருட் செல்வமில்லாத இராவணனது உரவலிமை. வரவலிமை
ஆகிய வல்லமைக்கு; எங்களால் ஒரு செயலின்றி- எங்களால் ஒரு
எதிர்ச் செயலும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம்; கருமுகில்
என வளர்கருணையங் கடல்- கரிய மேகம் போல (பாற்கடலில்)
கண்வளர்கின்ற கருணைக் கடலாகிய திருமால் பொருது;
இடர்தணிக்கின்- அவ்வரக்கருடன் போரிட்டு. எங்கள் துன்பத்தைத்
தணித்தால்தான்; உண்டு எனும் புணர்ப்பினார்-எங்களுக்கு உய்வுண்டு
என்னும் கருத்தினால்.
தருவிலி: செல்வமில்லாதவன். ‘அ’ என்னும் சுட்டால் உய்தற்குக்
காரணமாகிய அருட்செல்வத்தை உணர்த்திநின்றது. ஒரு செயல்: சிறு
செயலுமாம். ‘ஒரு’ சிறுமையை உணர்த்தும் அருட்செல்வத்தை
மிகுதியும் உடைய திருமாலைக் “கருணையங்கடல்” என்றார். கைம்மாறு
கருதாது உதவும் தன்மையால் “கருமுகில்” என்று திருமால்
போற்றப்படுகிறார் அவர். பொருது - அரக்கரை அழித்தால் நமது
துன்பம்தீரும் என்ற கருத்தைத் தேவர் உரைத்தனர் என்பது கருத்து.
புணர்ப்பு: தந்திரம் என்ற பொருள் உடையது. 10
