தியானமும் தூக்கமும்

தியானமும் தூக்கமும்

bookmark


மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். "அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்" என்றார்.

சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், "அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?" என்று கேட்டான்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்...

"முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான்!" என்று. அது கேட்டு அங்கு இருந்த அனைவரும் தியானத்தின் மகத்துவத்தை அறிந்து கொண்டனர்.