தாடகை வதைப் படலம் - 406
இவளைப் பெண் எனல் எளிமையாம் என்றல்
406.
‘மன்னும் பல் உயிர் வாரி. தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமை எதோ - ஐய!-
‘’பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை. எளிமையின் பாலதே!
மன்னும் பல் உயிர்வாரி- உலகில் நிலைபெற்றுள்ள பல உயிர்
வகைகளையும் அள்ளி எடுத்து; தன்வாய் பெய்து தின்னும் - தனது
வாயில் போட்டுத் தின்னுகின்ற; புன்மையின் தீமை எதோ -
புன்மையான தீமை வேறு எது உண்டு; ஐய! பின்னும் தாழ்குழல்
பேதைமைப் பெண் இவள் என்னும் தன்மை - தலைவ!
அப்படியிருந்தும் தாழ்ந்த கூந்ததை உடைய பேதைத்தன்மை வாய்ந்த
பெண் இவள் என்று நினைக்கும் தன்மை; எளிமையின் பாலதே-
இகழ்ச்சிக்கு உரியதாம்.
மன்னும்; நிலைத்திருக்கும். வாய்ப்பெய்து: வாயில்கொட்டி. புன்மை:
புல்லியதன்மை. தீமை: தீயதொழில். ஐய: தலைவனே. தாழ்குழல்:
வினைத்தொகை. பேதைமை: மனமிரங்கும் தன்மை. ‘பேதைமை என்பது
மாதர்க் கணிகலம்’ என்பதை நினைவு கூர்க. எளிமை: இகழ்ச்சி.
இவளைப் பெண் என்பது இகழ்ச்சிக்குரியது என்பது கருத்து. பாலது:
தன்மையது: உயிர்களைக் கொன்று தின்பதைவிட. தீயசெயல் எது
உள்ளது? இப்படிப்பட்டவளைப் பெண் என்று சொல்வது
இகழ்ச்சிக்குரியதேயாகும் என்பது கருத்து. எளிமை:
அறியாமையுமாம். 43
