தாடகை வதைப் படலம் - 395
இராமன் அவளைப் பெண்ணென
எண்ணிக் கணை தொடாமை
395.
அண்ணல் முனிவற்கு அது
கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
பெருந்தகை நினைந்தான்.
அண்ணல் முனிவற்கு - பெருமை பொருந்திய விசுவாமித்திர
முனிவனுக்கு; அது கருத்து எனினும் - அந்த அரக்கியை. கொல்வது
தான் கருத்து என்றாலும்; ஆவி உண் எனவடிக்கணை தொடுக்கிலன்
- அவள் உயிரை உண்டுவா வென்று கூரிய அம்பை ராமன்
விடவில்லை; உயிர்க்கே துண் எனும் - உயிர்களெல்லாம் நடுங்கி
அஞ்சுமாறு வினைத்தொழில் தொடங்கி உள்ளேனும் - கெட்ட
செயலைத் தொடங்கியுள்ளாள் என்றாலும்; பெருந்தகை. பெண் என
மனத்திடை நினைந்தான் - பெருந்தைமை உடைய இராமன் அவள்
பெண் ஆயிற்றே என்று மனத்தில் எண்ணலாயினான்.
அண்ணல்: வெருமையுடையவன். அது: தாடகையைக் கொல்வது.
துண்; நடுக்கம். பெருந்தகை: இராமன் (அன்மொழித் தொகை).
பெண்கொலை என்பதால் - முனிவன் விரும்பினாலும்
பெருந்தகையான இராமன் விரும்பவில்லை என்பதால் ’’ஆவி உண்
என வடிக்கணை தொடுக்கிலன் பெண்என மனத்திடை நினைத்தான்’’
என்றார். 36
