தாடகை வதைப் படலம் - 369

bookmark

பிரமன் வரமளித்தல்

369.    

‘முந்தினன் அரு மறைக்
   கிழவன். “முற்றும் நின்
சிந்தனை என்?” என.
   “சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க” என.
   “நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இல்லை; ஒரு மகள்
   உண்டாம்” என்றாள்.
 
முந்தினன்  - முன் வந்தான்; அருமறை - அரிய மறை; கிழவன் -
தலைவன்; சிந்தனை  -  எண்ணம்;  நுணங்கு  கேள்வி - நுட்பமான
கேள்வியறிவு.                                         20-4