தாடகை வதைப் படலம் - 363
தாடகை உருவ வருணனை (363-365)
363.
‘மண் உருத்து எடுப்பினும்.
கடலை வாரினும்.
விண் உருத்து இடிப்பினும்.
வேண்டின். செயகிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும்
பாவம் ஈண்டி. ஓர்
பெண் உருக் கொண்டெனத்
திரியும் பெற்றியாள்;
உருத்து மண் எடுப்பினும் - கோபித்து. இந்தப் பூமியை
எடுப்பதாயினும்; கடலை வாரினும் - கடல்நீரையெல்லாம்
அள்ளுவதானாலும்; உருத்து விண் இடிப்பினும் - கோபம்கொண்டு
மேகத்தை இடிப்பதானாலும்; வேண்டின் செய்கிற்பாள் - அவள்
விரும்பினால் செய்ய வல்லவளாவாள்; எண் உரு தெரி வரும் -
எண்ணத்தினால் செய்யப்படும் நுண்மையான பாவமும் (உடலால்)
செய்யப்படும் பருமையான பாவமும் உருவம் கொண்டு; பாவம் ஈண்டி
- ஒரு சேரச் சேர்ந்து; ஓர்பெண் உருக்கொண்டு என - ஒரு
பெண்வடிவைக் கொண்டது என்னும்படி; திரியும் பெற்றியார்-இங்குத்
திரிகின்ற தன்மை உடையவள்.
‘மண்’ சினையாகு பெயராய்ப் பூமியை உணர்த்தும். உருத்தல்:
சினத்தல். வாரினும்: வாருதல் (அள்ளுதலுமாம்). விண்: வானம்: இங்கு
மேகத்தை உணர்த்தும். நுண்மையான பாவம் பருமையான பாவம்
என்பன கண்ணால் காண முடியாதது. பெற்றி: தன்மை. பூமியை
எடுக்கவும். கடல் நீரை அள்ளவும். மேகத்தை இடிக்கவும்
செய்யவல்லவள். பாவமெல்லாம் திரண்டு ஒரு பெண் வடிவம்
கொண்டது போன்ற தன்மையள் என்பது கருத்து. 22
