தாடகை வதைப் படலம் - 358
பாலையின் வெப்பத்தால் அரசிளங்குமரர்
வருந்துவர் என விசுவாமித்திரர் எண்ணுதல்
358.
எரிந்து எழு கொடுஞ் சுரம்
இனையது எய்தலும்.
அருந் தவன். ‘இவர். பெரிது
அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும்.
பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது’ என
மனத்தின் நோக்கினான்.
எரிந்து எழு கொடும்சுரம் - காய்ந்து எழுகின்ற கொடிய பாலை
நிலமான; இனையது எய்தலும் - இத்தன்மையான நிலத்தை
அடைதலும்; அரும்தவன் - அரியதவத்தை உடைய விசுவாமித்திர
முனிவன்; இவர் பெரிது அளவில் ஆற்றலைப் பொருந்தினர்
ஆயினும் - இந்த அரச குமாரர்கள் அளவற்ற ஆற்றல்
வாய்ந்தவரானாலும்; பூவின் மெல்லியர் - மலரி்னும் மென்மையான
உடலைஉடையவர் ஆதலால்; வருந்துவர் சிறிது என மனத்தின்
நோக்கினான் - சிறிதளவேனும் வருந்துவர் என்று. மனத்தில்
எண்ணி அவர்களைப் பார்த்தான்.
எரிந்து: காய்ந்து. கொடுஞ்சுரம்: கொடுமையான பாலைநிலம்.
மனத்தின் நோக்கினான்: மனத்தில் ஆழ்ந்து சிந்தித்தான். 17
