தாடகை வதைப் படலம் - 355
355.
ஏய்ந்த அக் கனலிடை எழுந்த கானல் - தேர்.
காய்ந்த அக் கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் காலுடைப் பளிக்குப் பீடமே!
ஏய்ந்த அக்கனலிடை- அப்பாலை வனத்திலே பொருந்திய அந்த
நெருப்பு மயமான நிலத்திலே; எழுந்த கானல்தேர் - தோன்றிய
பேய்த்தேரின் தோற்றம்; காய்ந்த அக்கடு வனம் - எல்லாம் காய்ந்து
போன கடுமை வாய்ந்த அப்பாலைவனத்தை; காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு - ஆட்சிபுரியும் வேனில்காலம் என்னும் அரசனுக்கு;
அரச வீற்று இருக்க - திருவோலக்கமா வீற்றிருக்க; செய்தது ஓர் -
செய்யப்பட்டதாகிய ஒப்பற்ற ஒரு; பாய்ந்த பொன் கால்உடை -
உருக்கிப் பாய்ந்த பொன்னாலான கால்களை உடையதுமான; பளிங்குப்
பீடமே- பளிங்கினால் செய்த ஆசனமே போலுமாம்.
ஏய்ந்த: பொருந்திய. அக்கடுவனம்: அதிக வெப்பமான
பாலைவனம். வேந்து: வேனில் அங்குத் தனியாட்சி புரிவதால்
இவ்வாறு கூறினார். பாய்ந்த பொன்: உருக்கிப் பாய்ச்சிய பொன்.
பீடம்: இருக்கை. அப்பாலைவனத்துப் பேய்த்தேரின் தோற்றம்
வேனில் வேந்தன் அங்குத் தனியரசு செய்ய - அவன் அமர்வதற்காக
அமைந்த பளிங்குப் பீடம் போன்றிருந்தது என்பது கருத்து. 14
