தரிசு நிலமாய் நீரின்றி வாழ்வில் தவிக்கும் என்னிடம் வா

bookmark

என் வாழ்வின் ஊற்றே வா (3)

1. உடைந்த படகாய் நீயின்றி வாழ்வில் தவிக்கும் என் மனம் வா
என் வாழ்வின் ஓட்டமே வா (3)

2. உலர்ந்த மலராய் நீயின்றி வாழ்வில் தவிக்கும் என் உளம் வா
என் வாழ்வின் ஆற்றலே வா (3)

3. தளர்ந்த வாழ்வில் சோர்ந்திடும் வேளை அழைக்கும் என்னிடம் வா
உன் ஜீவ வார்த்தையைத் தா (3)