சோமதேவன்புகழ்

சோமதேவன்புகழ்

bookmark

நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய், 
  வயமிக்க அசு ரரின் மாயையைச் சுட்டாய், 
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய், 
  துயர் நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய். 
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பய் 
  உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்; 
புயலிருண் டேகு முறி யிருள்வீசி வரல்போற் 
  பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)