சிறப்புலி நாயனார்

bookmark

பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இறந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் "நிதி மழை மாரி போல்" ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார். சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். இப்படி வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து வந்ததன் பயனாய் இறுதியில் இவர் திருவைந்தெழுத்தொதிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். இதுவே சிறப்புலி நாயனார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பாகும்.

"சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்" என்று திருத்தொண்டத் தொகை இவரைப் புகழ்ந்து உரைக்கிறது.