கலை
கலை சோறூட்டாவிட்டாலும் சோர்வூட்டாது.
கலை ஒரு பொருள் அன்று அது ஒரு நெறி.
சொல்லாமல் சொல்வதே ஓவியம்.
கலைகள் அனைத்தும் இயற்கையின் நகலே.
காலம் கடிது கலையோ நெடிது.
கலைஞனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு.
கலைக்குப் பகை அறியாமையே.
கலை கலைக்காகவே பயன்பாட்டிற்கல்ல பயன்பாட்டிற்கென்றால் கலை நெறி பிறழும்.
வாழ்க்கைக்கு வடிவம் அளிப்பதே கலையின் நோக்கம்.
வாழ்வு சிறிது வளர்கலை பெரிதே!
