கதவு தட்டும் சப்தம்!
நான் நன்கு உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென யாரோ பலமாக கதவு தட்டுவது போல இருந்தது. திடுக்கிட்டு எழுந்தேன். வெளியே சென்று பார்த்தல் சப்தம் குறைந்து விட்டது. மீண்டும், படுக்கை அறைக்கு திரும்பும் போது கதவு தட்டும் சப்தம் அதிகரித்தது. அந்த சப்தம் நான் எண்ணியது போல கதவில் இருந்து வரவில்லை. என் படுக்கையறை கண்ணாடியில் இருந்து வந்துக் கொண்டிருந்தது.
